March 4, 2015

யோசித்தவிடம் விசாரணை நடைபெற்றுள்ளது!


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் யோசித்த ராஜபக்ஷ இன்று கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.


கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பணிப்பாளர், ரொஷாந்த டி சில்வா இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் இருந்து அண்மையில் சிறிய ரக வானுர்தி ஒன்று மீட்கப்பட்டிருந்தது.

இது குறித்தே அவரிடம் விசாரணை செய்யப்பட்டுள்ளது.

திரைப்பட இயக்குனர் சந்திரன் ரத்னத்தினால் அந்த வானூர்தி யோஜித்த ராஜபக்ஷவுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்து.

Namai 01
Namai 02
Namail
yoshitha  namail
yoshitha

No comments:

Post a Comment