March 3, 2015

குருநகரினில் வெடிபொருள் மீட்பு! இருவர் கைது!

யாழ்ப்பாணம், குருநகர் பகுதியிலுள்ள வீடொன்றில் வெடிமருந்தை பதுக்கி வைத்திருந்ததாக இருவர் கைதாகியுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து 13 கிலோ 275 கிராம் நிறையுடைய வெடிமருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.


இலங்கை குற்றத்தடுப்பு காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, அங்கு சென்று சந்தேகநபர்களை கைது செய்திருந்தனர். சந்தேகநபர்களை பயங்கரவாத குற்றத்தடுப்பு காவல்துறையிடம் மேலதிக விசாரணைகளிற்கு ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மீன்பிடி நடவடிக்கைகளிற்காக அவ்வாறு வெடிபொருட்களை பதுக்கி வைப்பது தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment