February 25, 2015

வீரவன்சவின் மனைவிக்கு விளக்கமறியல் நீடிப்பு!°


கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். போலியான தகவல்களை வழங்கி ராஜதந்திர கடவுச் சீட்டை பெற்றுக் கொண்டமைக்காக அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இன்று அவர் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவரை எதிர்வரும் மார்ச் மாதம் 4ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
எவ்வாறாயினும் அவர் சிறைச்சாலை வைத்தியசாலையிலேயே அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment