December 25, 2014

ஐ.தே.க. தலைமையகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம்; மோதலாக மாறியது!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவிற்கு முன்பாக இன்று புதன்கிழமை காலை தேசிய அமைப்புக்களின் ஒன்றியம் எனும் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் மோதலாக
மாறியது.
மைத்திரிபால சிறிசேனவுக்கும், ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் இரகசிய ஒப்பந்தமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கோசமிட்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் ஆதரவு அமைப்பான தேசிய அமைப்புக்களின் ஒன்றியம் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தது. அப்போது, இரண்டு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டது. இதனால், அந்தப் பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டது.

No comments:

Post a Comment