December 29, 2014

பேஸ்புக்மூலம் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த முயற்சி – மகிந்த!

பேஸ்புக் ஊடாக சிறிலங்காவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வெளிநாடுகள் முயற்சிப்பதாக மகிந்தராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். 
ஹென்வல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
பேஸ்புக் மூலம் தமக்கு எதிராக பிழையான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும், அவற்றை நம்ப வேண்டாம் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேநேரம் லிபியாவின் முன்னாள் தலைவர் மொவுமர் கடாபியின் நிலைமையே தமக்கு ஏற்படுதம் என்று சிலர் விமர்சிக்கின்றனர். மக்களின் ஆதரவு இருக்கும் வரையில் தமக்கு அவ்வாறான நிலைமை வராது என்று அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment