December 29, 2014

கிளிநொச்சியில் அடையாளம் தெரியாத சடலம்!

கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரது
சடலம் மீட்கப்பட்டுள்ளது. அப்பகுதியிலுள்ள கிணறு ஒன்றிலிருந்தே குறித்த ஆணின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சடலத்தை மீட்டு, கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், சடலம் அழுகிய நிலையில் காணப்பட்டதாகவும் இதுவரையில், இந்த சடலம் யாருடையதென அடையாளம் காணப்படவில்லையெனவும் தெரியவருகின்றது.
அண்மை நாட்களில் காணாமல் போன எவருடைய சடலமா இதுவென சந்தேகம் எழுந்துள்ளது.

No comments:

Post a Comment