September 10, 2014

இம்மாத இறுதியில் கிளிநொச்சியில் ஆணைக்குழுவின் அடுத்த கட்ட விசாரணையாம்!

காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதியின் ஆணைக்குழு இந்த மாதம் கிளிநொச்சியில் தங்களின் அடுத்தக்கட்ட விசாரணைகளை நடத்தவுள்ளது.


இதன்படி எதிர்வரும் 27ம் திகதி முதல் 30ம் திகதி வரையில் அந்த குழு கிளிநொச்சியில் விசாரணையில் ஈடுபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

27ம் மற்றும் 28ம் திகதிகளில் முலங்காவில்லிலும் 29ம் மற்றும் 30ம் திகதிகளில் பூனகரியிலும் இந்த விசாரணைகள் இடம்பெறவுள்ளன.

இந்த விசாரணைகளின் போது ஆணைக்குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ள சர்வதேச நிபுணர்களும் உடன் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment