April 23, 2014

யாழ்ப்பாணம் வேதாந்தமடத்தில் இன்று விளக்கவுரை!

யாழ்ப்பாணம் சைவ மகா சபையில் நடத்தப்பட்ட தமிழ் அருட்சுனைஞர் பயிற்சி நெறிக்காக இந்தியா-தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்த செந்தமிழ் வேள்விச் சதுரர்
மு.பே.சத்தியவேல் முருகனார் கடந்த இரண்டு தினங்களாக கந்தர்மடத்தில் அமைந்துள்ள சிவகுருநாதபீடம் என்ற வேதாந்தமடத்தில் சைவ சித்தாந்தம் தொடர்பான விளக்கவுரையை நடத்தி வருகின்றார்.
சைவ மகா சபையின் ஏற்பாட்டில் இடம்பெறுகின்ற இந்த விளக்கவுரையின் இறுதி நிகழ்வு இன்று புதன்கிழமை இடம்பெறவுள்ளது. இன்று மாலை 6.30 மணி தொடக்கம் 8 மணிவரை திருவள்ளுவரும் சைவ சித்தாந்தமும் என்ற தலைப்பில் இவர் உரையாற்றவுள்ளார்.
இந்த நிகழ்வில் யாழ்.பல்கலைக்கழக இந்து நாகரிகத்துறை மற்றும் க.பொ.த உயர்தர மாணவர்களும் நலன் விரும்பிகளும் ஆசார சீலர்களாகப் பங்குபற்றி பயன்பெற முடியுமென்று சைவ மகா சபை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment