April 23, 2014

பிரான்சின் புறநகர் பகுதியில் நடைபெற்ற இல்ல விளையாட்டுப்போட்டி!

பாரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான நியூலிசூர்மான் நகரத்தில் தமிழ்ச்சங்கத்தின் தமிழ்ச்சோலை மாணவர்களுக் கிடையேயான இல்லவிளையாட்டுப்போட்டிகள் கடந்த 19ம் நாள் சனிக்கிழமை நடைபெற்றன.

காலை 11.30 மணிக்கு ஈகைச்சுடர் ஏற்றலுடன், அகவணக்கம் செலுத்தப்பட்டு போட்டிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது. சங்கிலியன், எல்லாளன் இல்ல அணிவகுப்பு நடைபெற்றது அணிவகுப்பு மரியாதைகளை தமிழ்ச்சங்கத் தலைவர், தமிழ்ச்சோலை தலைமைப்பணியக உறுப்பினர், மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளின் ஒருங்கமைப்பாளர்கள் ஏற்றுக் கொண்டனர். இரண்டு கழகங்களும் மிகவும் உற்சாகமாக போட்டிகளில் போட்டியிட்டனர்.
பெரியவர்களுக்கான பெண்களுக்கான கயிறிழுத்தல் போட்டிகளும் இடம் பெற்றன. விநோதவுடைப்போட்டிகளில் தாயகத்தை நினைவு தரும் வகையில் மாணவர்கள் தமது வெளிப்பபாடுகளை தந்திருந்தனர்.
வெற்றி பெற்ற வீரர்களுக்குக்கான பரிசில்களை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழ்ச்சங்க கூட்டமைப்பினர், விளையாட்டுத்துறையினர் வழங்கி மதிப்பளித்திருந்தனர்.

No comments:

Post a Comment