June 1, 2016

விடுதலைப் புலி உறுப்பினர்களின் விளக்கமறியல் காலம் நீடிப்பு!

விடுதலைப் புலிகளின் இலட்சணை பொறிக்கப்பட்ட ஒரு தொகை தொப்பிகளை தம்வசம் வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் கைது
செய்யப்பட்ட இருவருக்கும் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாதேவன், ஜேசுதாசன் ஆகிய சந்தேகநபர்கள் இருவரும் அண்மையில் வவுனியாவில் வைத்து கைது செய்யப்பட்டிருந்ததாகவும், இவர்களது விளக்கமறியல் காலம் எதிர்வரும்

15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு மாவட்ட நீதவான் அருணி ஆட்டிகல இன்று உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் குறித்த சந்தேகநபர்களிடமிருந்து நீதிமன்றின் அனுமதியுடன் வாக்குமூலம் பெறுவதற்கு இரண்டு தடவைகள் முயற்சித்த போதும் இதன் பிரதான சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜராகவில்லை என பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் இன்று நீதிமன்றில் தெரிவித்திருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த வழக்கின் பிரதான சந்தேகநபர் விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுப் பிரிவின் நகுலன் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment