June 6, 2016

அமெரிக்காவின் புகழ்பெற்ற போர்க்குற்ற வழக்கறிஞர் தமிழ் மக்கள் பேரவை குழுவில் இணைவு!

லினோய்ஸ் பல்கலைக்கழகத்தின் சர்வதேச சட்ட பேராசிரியர் பிரான்ஸிஸ் ஏ பொய்ல், இலங்கையில் யுத்த மற்றும் குற்ற விசாரணைகளை
மேற்கொள்வதற்காக சர்வதேச நீதித்துறையிடம் போராடுவதற்காக தமிழ் மக்கள் பேரவை குழுவில் இணைந்துள்ளார் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

மனித உரிமைகள் போர் குற்றங்கள், இனப்படுகொலை,சுய நிரிணய உரிமை ஆகியவற்றில் புகழ்பெற்ற ஒரு நிபுணரே பிரான்ஸிஸ் ஏ பொய்ல்.

வடமாகாண முதலமைச்சர சீ.வி.விக்னேஸ்வரனின் ஆசியுடன் தமிழ் மக்கள் பேரவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பிரச்சினை தொடர்பில் போராடுவதாக கூறி விட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு நழுவிக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தங்களுடன் ஒத்துழைப்பை வழங்குவார் என தமிழ் தேசிய கூட்டமைப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் இந்த பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் தெளிவு படுத்தாமல் இருப்பதாக தமிழ் மக்கள் பேரவை கவலை தெரிவித்துள்ளது.

சர்வதேச சட்ட பேராசிரியர் பிரான்ஸிஸ் ஏ பொய்லின் வருகை தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வாக இருக்கும் என தமிழ் மக்கள் பேரவை குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment