September 26, 2015

யாழ். புதுமண தம்­ப­தி­கள் மீதான தாக்குதல்! சிகிச்சை பெற்றுவந்த கணவர் உயிரிழப்பு!

யாழ்.பேருந்து தரிப்­பி­டத்­திற்கு அருகில் புதி­தாக திரு­ம­ண­மான தம்­ப­தி­கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் படு­கா­ய­ம­டைந்து சிகிச்சை பெற்று வந்த கணவர் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

தனியார் கல்வி நிறு­வன ஆசி­ரி­ய­ரான மாதவ மணி­வண்ணன் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
இச் சம்­பவம் தொடர்­பாக மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,
கடந்த சனிக்­கி­ழமை இரவு கணவன், மனைவி இரு­வரும் தேநீர் அருந்­து­வ­தற்­காக யாழ்ப்­பாணம் தனியார் பேருந்து நிலை­யத்­திற்கு அரு­கி­லுள்ள தேநீர் சாலைக்கு சென்­றுள்­ளனர். இந்­நி­லையில் அவ்­வி­டத்தில் மது­போ­தையில் இருந்த சிலர் அவர்கள் இரு­வ­ரையும் தகாத வார்த்­தை­களால் ஏளனம் செய்து அவர்­களை தாக்கிக் காயப்­ப­டுத்­தி­யி­ருந்­தனர்.
தாக்குதலில் பலத்த காயங்­க­ளுக்கு உள்­ளான நிலை­யில் ­க­ணவன், மனைவி ஆகிய இரு­வரும் யாழ். போதனா வைத்­தி­ய­சா லையில் சேர்க்­கப்­பட்­டி­ருந்­தனர். இந்த நிலையிலேயே கணவரான தனியார் கல்வி நிறுவன ஆசிரியர் மாதவ மணி­வண்ணன் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயி ரிழந்துள்ளார்.
குறித்த சம்­ப­வத்­துடன் தொடர்­பு­பட்­ட­தாக சந்­தே­கத்தின் பேரில் இரு சந்­தே­க­ந­பர்கள் கைது­செய்­யப்­பட்டிருந்தனர். இவர்கள் கடந்த 23 ஆம் திகதி புதன்­கி­ழமை நீதி­மன்றில் முற்­ப­டுத்­தப்­பட்டதைய டுத்து எதிர்­வரும் 7 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்குமாறு பதில் நீதி­வான் மு.கேசவன் உத்­த­ர­விட்­டிருந்தார்.
அத்­துடன் குறித்த தினத்­தன்று சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய சாட்­சி­யங்­களை மன் றில் முற்­ப­டுத்­து­மாறு ­பொ­லி­ஸா­ருக்கு நீதி வான் பணித்­துள்ளார்.
இதே­வேளை குறித்த சம்­ப­வத்­துடன் தொடர்புடையதாக மேலும் ஒரு சந்தேக நபரை நேற்றுக் கைதுசெய்துள்ளதாகவும் அவரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளாகவும் யாழ்.பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி யு.கே.வுட்லர் மேலும் தெரி வித்தார்.

No comments:

Post a Comment