August 27, 2015

திரு­ட­னொ­ரு­வனை பிடித்து பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைத்த பெண்!

பெண்­ணொ­ருவர் திரு­ட­னொ­ரு ­வனை பிடித்து வீட்­டுக்குள் கட்­டி­ வைத்து  பொலி­ஸா­ரிடம் ஒப்­படைத்த சம்­ப­வ­மொன்று நேற்று புதன்கிழமை அதி­காலை கல்­மு­னைக்­குடி பகு­தியில் இடம் பெற்­றுள்­ளது.

சம்­பவம் தொடர்­பாக வீட்­டு­ரி­மை­யா­ள­ரான  குறித்த பெண் குறி ப்­பி­டு­கையில்,
நான் தூங்கிக் கொண்­டி­ருக்கும் சமயம்  ஒரு சத்தம் கேட்டது. அப்­போது கண்­வி­ழித்தேன். என் முன்னால்  ஒருவர் நட­மா­டு வது தெரிந்­தது. அவர்  அங்கும் இங்கும் நட­மாடி ஏதோ தேடிக் கொண்­டி­ருந்தார். நான் நினைத் தேன். தனது பிள்­ளைகள் நித்­தி­ரையில் இருந்து எழும்பி ஏதும் தேடு­கின்­றார்கள்  என்று பின்னர் எனக்கு  இவர் கள்­வர் தான் என்­பதை உணர முடிந்­தது. எனக்கு சத்தம் போடவும் பய­மாக இருந்­தது. ஏதா­வது நடந்து விடும் என்ற பயத்­தினால் நடு ங்­கிய வண்ணம்  பார்த்துக் கொண்டே தூங்­கு­வது போன்று பாசாங்கு செய்தேன்.  இவர் தேடு­வதைப் பார்த்தால் இவ­ருக்கு  பணம்தான் தேவை­யாக இருந்­தி­ருக்கும் என்று  மன­துக்குள் நினைத்தேன். அந்த நேரம் மேசையின் மேலே  இருந்த 300ரூபா பணத்தை எடுத்துக்  கொண்டு  என் அருகே வந்து என் கழுத்தில் இருந்த தங்க சங்­கி­லியை அறுப்­ப­தற்கு கையை நீட்­டியபோது  வச­மாக அவரை  இறுக்க பிடி த்துக் கொண்டே அதன் பின் னர் சத்தம் போட்டேன். இத­னி­டையே எனது பிடியில் இருந்து  தப்­பு­வ­தற்கு எனது வலது  பக்க தோள்­பட்­டை யில் சர­மா­ரி­ யாக கடித்தான் அத­னையும் பொருட்­ப­டுத்­தாது. நானும் என் கண­வரும் பிள்­ளை­களும் சேர்ந்து அந்தக் கள்­வனை கட்­டி­வைத்தோம் என அந்தப் பெண் தெரி­வித்தார்.
வீட்டு மொட்­டை­மா­டிக்­குமேல் ஏறி கொள்­ளை­யிட வீட்­டுக்குள் இறங்­கிய அந்தக் கள்வனுக்கு 15 வயது இருக்கும். கையும் மெய்யு மாக  பிடிக்கப்பட்ட கள்வன் கல் முனை பொலிஸாரிடம் ஒப்படை க்கப்பட்டுள்ளனர்

No comments:

Post a Comment