August 16, 2016

விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினரான மாத்தையா ஒரு உளவாளி!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவராக கருதப்பட்ட மாத்தையா எனப்படும் கோபாலசுவாமி மகேந்திரராஜா இந்திய றோ உளவுப் பிரிவின் உளவாளி என தெரிவிக்கப்படுகிறது.


1989ஆம் ஆண்டு முதல் மாத்தையா றோ உளவாளியாக கடமையாற்றியிருந்தார் என ஊடகவியலாளர் நீனா கோபல் எழுதியுள்ள நூல் ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை இல்லாதொழித்து புலிகளின் தலைமைப் பொறுப்பினை ஏற்றுக்கொள்ளுமாறு மாத்தையாவிற்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.

எனினும் மாத்தையா றோ உளவுப் பிரிவிற்காக கடமையாற்றிய குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டார் என்பது இந்திய புலனாய்வுப் பிரிவிற்கு தெரியாது எனவும் அந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், 1993ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல் பற்றிய விபரங்களை இந்தியாவிற்கு மாத்தையா வழங்கியததாக கூறப்பட்டுள்ளது.

இந்த கப்பல் தாக்குதலில் புலிகளின் முக்கிய உறுப்பினர் மற்றும் பிரபாகரனின் சிறு வயது தோழருமான கிட்டு உயிரிழந்தார் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாத்தையாவை கைது செய்த தமிழீழ விடுதலைப் புலிகள் 1994ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் திகதி அவரை கொலை செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், அவரது 257 சகாக்களையும் விடுதலைப் புலிகள் கொன்று சடலங்களை குழியொன்றில் இட்டு தீயிட்டுக் கொளுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, றோ உளவுப் பிரிவை தவிர்ந்து, இந்தியப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் ஏனைய தரப்பினரும் வடக்கு, கிழக்கில் தகவல்களை திரட்டியதாக அந்த நூலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment