July 12, 2016

யாழ்.நகரில் மின்கம்பத்துடன் மோதியது ஹயஸ் வான்! - பெண் பலி, நால்வர் படுகாயம் !

யாழ்ப்பாணம் நகரில் நேற்றுமாலை 4.30 அளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததோடு, நால்வர் காயமடைந்தனர்.


நயினாதீவில் இருந்து யாழ்.நகருக்குள் வந்த ஹயஸ் வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இதில் தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த சிறீதரன் சிவமலர் (வயது48) என்ற பெண் உயிரிழந்தார். வானில் பயணித்தவர்களில் நால்வர் காயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



No comments:

Post a Comment