July 9, 2015

வன்னி மருத்துவர்களுக்கு புலனாய்வுப் பிரிவினர் KFC விருந்துபசாரம்!

இறுதிக் கட்ட போரின் போது வன்னியில் கடமையாற்றிய மருத்துவர்களுக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் கே.எப்.சீ சிக்கன் உணவகத்தில் விருந்துபசாரமொன்றை வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது. 
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது கடமையில் ஈடுபட்டிருந்த டாக்டர் துரைராஜா வரதராஜா இதனைத் தெரிவித்துள்ளார்.

பி.பி.சீ உலக சேவைக்கு அளித்த செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினர் தாக்குதல் நடத்தவில்லை எனத் தெரிவிக்கும் வகையில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிற்கு முன்னதாக என்ன பேச வேண்டும் என்பது குறித்து இராணுவத்தினர் தமக்கு பயிற்சி வழங்கியதாகவும் ஒத்திகை பார்க்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அழுத்தங்கள் காரணமாகவே தாம் இவ்வாறு செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment