July 9, 2015

கட்சியின் கொள்கையை மீறி நியமனம் செய்தால் கொலை செய்வதற்கு சமனாகும்: மாவைக்கு இளைஞரணி கடிதம்!

பாராளுமன்ற வேட்பாளர் பெயரினை வேட்பு மனுத் தாக்கல் செய்யும் மூன்று நாட்களுக்கு முன்பு பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட இளைஞரணி, அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இளைஞரணியினர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
எமது கட்சியின் சார்பாக எமது மாவட்டம் சார்பாக கட்சியில் அங்கத்துவம் அற்ற திருமதி சாந்தி என்பவரை வேட்பாளராக நியமனம் செய்யவுள்ளதாக அறிகிறோம்.
எமது கட்சியின் கொள்கைக்கும் கட்டுப் பாட்டுக்கும் எதிராக நபர் ஒருவரை நியமனம் செய்வதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளியோம்.
மேற்படி ஒரு வேட்பாளரை நியமனம் செய்யும் பட்சத்தில் எமது கட்சியின் மாவட்ட கிளையினையும் உறுப்பினர்களையும் கொலை செய்வதற்கு சமனாகும். என குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment