July 14, 2015

தேர்தலால் தாமதிக்கப்படும் இந்திய மீனவர் விடுதலை!

தேர்தல் அறிவிப்பால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களது விடுதலையும் தடைப்பட தொடங்கியுள்ளது.அவ்வகையினில் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து, மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைதான 26 இந்திய மீனவர்களையும்; எதிர்வரும் 27 ஆம் திகதி வரை
விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் மாணிக்கராசா கணேசராசா உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தின் காரைக்கால் மற்றும் நாகப்பட்டிணத்தை சேர்ந்த மீனவர்களே இவ்வாறு விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளனர். மேற்படி மீனவர்கள், கடந்த ஜூன் மாதம் 21 ஆம் திகதி பருத்தித்துறை கடற்பரப்பை அண்மித்த கடற்பரப்பில் 5 விசைப்படகில் வந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் காங்கேசன்துறை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர். பின்னர் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய விளக்கமறியலில்
வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment