July 16, 2015

மகிந்தவின் மீள்பிரவேசத்துக்கு சிறந்த பாதை அமைப்பு – த நியுயோர்க் ரைம்ஸ்!

மகிந்த ராஜபக்ஷவின் அரசியல் மீள்பிரவேசத்துக்கு சிறந்த பாதை உருவாக்கிக் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

த நியுயோர்க் ரைம்ஸ் பத்திரிகை இதனைத் தெரிவித்துள்ளது.

கடந்த ஆறு மாதங்களில் மகிந்தராஜபக்ஷ தமது அரசியல் பிரவேசத்தை நன்கு திட்டமிட்டுள்ளார்.

தமக்கு உதவக்கூடிய அனைத்து சக்திகளையும் அவர் ஒன்று திரட்டியுள்ளார்.

தேர்தலின் பின்னர் மகிந்த வெற்றிபெற்றாலும், அவரை பிரதமராக்கப் போவதில்லை என்ற மைத்திரிபால சிறிசேன கூறி வருகிறார்.

எனினும் இது நடைமுறைக்கு சாத்தியம் இல்லாது.

தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பெரும்பான்மை பெற்றால், அனைத்து உறுப்பினர்களும் மகிந்தவையே ஆதரிப்பார்.

அப்போது மைத்திரிக்கு மாற்றுத் தெரிவுகள் இருக்காது.

மகிந்தவையே பிரதமராக நியமிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

No comments:

Post a Comment