July 3, 2015

கொள்கைரீதியில் உடன்படக் கூடியவர்களுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் வாய்ப்பு வழங்கப்படும்!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு அதற்காக தம்மை அர்ப்பணிக்கத் தயாராக இருப்பவர்கள் யாராக இருந்தாலும், எக்கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் சைக்கிள்
சின்னத்தில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும். என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அத்துடன், வடக்கு கிழக்கின் ஐந்து தேர்தல் மாவட்டங்களில் எமது கட்சி தனித்து போட்டியிடப் போகிறது. எமது கொள்கையான தேசியம், சுயநிர்ணயம், தாயகம் போன்றவற்றை முன்னிலைப்படுத்தி கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கப்படும். என்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் அவர்கள்  கூறியுள்ளார்.

No comments:

Post a Comment