July 10, 2015

பொலிசாருக்கே சண்டித்தனம் காட்டிய ரவுடிகள் !! - சுன்னாகத்தில் நடந்த சம்பவம்!

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஒருவருகு சண்டித்தனம் காட்ட முற்பட்டவர்கள் சுன்னாகம் பொலிஸாரிடம் வசமாக மாட்டிக்கொண்டனர். இச்சம்பவம் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு சுன்னாகம் பகுதியில் இடம் பெற்றுள்ளது.


 சுன்னாகம் நகரப் பகுதிக்கு அண்மையாக காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள மதுபான நிலையத்திற்கு முன்பாக இரவு 11 மணியளவில் பொல்லுகள், இரும்புக் கம்பிகள் சகிதம் மோட்டார் சையிக்கிள்களுடன் நின்ற ஓர் இளைஞர் கும்பல் ஒன்று தெல்லிப்பழை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி காரில் வந்துகொண்டு இருந்த வேளையில் காரின் முன்பாக மோட்டார் சையிக்கிளை விட்டு மறித்து சண்டித்தானம் காட்டியுள்ளது. பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உடனடியாக சுன்னாகம் பொலிஸாருக்கு வழங்கிய தகவலைத் தொடர்ந்து குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்த சுன்னாகம் பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை கைது செய்தனர். இருவர் பொலிசாரைக் கண்டதும் மோட்டார் சையிக்கிளில் தப்பி ஒடியுள்ளார்கள். தப்பி ஓடிய இருவரையும் தேடும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். 

No comments:

Post a Comment