July 9, 2015

கோட்டாவின் புதைகுழிகளுக்குள் மேலும் பல மனித எச்சங்கள்!

திருகோணமலை, மெக்கெய்ஸர் மைதானத்தில் நேற்று (08) மூன்றாவது நாளாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளில் மேலும் நான்கு மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை நீதவான் முன்னிலையில்,மெக்கெய்ஸர் மைதானத்தில் நேற்று (08) மூன்றாவது நாளாக அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைய கடந்த ஆறாம் திகதி குறித்த மைதானத்தில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இதேவேளை, திருகோணமலை கிண்ணியா பகுதியில் ஐந்து மோட்டார் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் 60 மில்லிமீற்றர் ரக குண்டை உப்பாறு பகுதிக்கு கொண்டுசென்று செயலிழக்க செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த புதைகுழிகளுக்கு கோட்டாவும் பொருப்புக்கூற வேண்டும்

No comments:

Post a Comment