July 15, 2015

நீதிமன்றத் தாக்குதல் சம்பவம்!! ஒருவருக்கு மட்டுமே பிணை!! ஏனையவர்கள் மேல் நீதிமன்றில்!

நீதிமன்றம் தாக்கப்பட்டமை மற்றும் பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டவர்களில் ஒருவரை யாழ்.நீதவான் நீதிமன்றம் பிணையில் செல்ல  அனுமதி வழங்கியது. ஏனையவர்களுக்கான பிணை
விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
வழக்கு யாழ்.நீதவான்  நீதிமன்றத்தில் நீதவான் பி.சிவகுமார் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இன்றைய தினம்  சந்தேகநபர்கள் 30 பேர் மன்றிற்கு முன்னிலையாகியிருந்தனர்.    மூன்று வழக்குகள்  இவர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ளது.  
வழக்குகளை விசாரணை செய்த நீதவான்   மூன்று வழக்கில் இருந்தும்  நடைபெறவுள்ள உயர்தரப்பரீட்சையில் தோற்றவுள்ள மாணவனுக்கு நிபந்தனையுடன்  கூடிய பிணை வழங்கப்பட்டுள்ளது.
ஏனைய 29 சந்தேகநபர்கள் தொடர்பில் மன்றிற்கு சமர்ப்பிக்கப்பட்ட பிணை விண்ணப்பங்களில் விதிவிலக்கான சந்தர்ப்பங்கள் இல்லை என்றும் இதனால் பிணை வழங்க முடியாது எனவும்  பிணை தேவையெனின்  மேல் நீதிமன்றத்தை நாடலாம் என்றும்  தெரிவித்து விண்ணப்பங்களை நீதவான் நிராகரித்தார்.
குறித்து 29 பேரையும்  எதிர்வரும் எதிர்வரும் 29 ஆம் திகதி  வரைக்கும்  விளக்கமறியலில் வைக்குமாறும்  நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment