July 14, 2015

தமிழ் தேசிய மக்கள் முன்னணி இன்று யாழ். மாவட்ட தேர்தல் தொகுதியில் போட்டயிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளது.

தமிழ்தேசியம், சுயநிர்ணய உரிமை, தாயகம் என்பவற்றை தமிழ் தேசிய மக்கள் முன்னணி முன்னெடுத்துச் செல்லும் -கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-
தமிழ் மக்களின் உரிமைகள், நீதிகள் மறுக்கப்படுவதற்கு தமிழ் தேசிய மக்கள்
முன்னணி முற்றுப்புள்ளி வைக்கும் என்றும் அக் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களிடம் உள்ளார்ந்தமாக இருக்கும் கோட்பாடுகளை, கொள்கைகளை முன்கொண்டு செல்வதற்கான மாற்றப் பாதையாக எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் இருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.தமிழ்தேசிய மக்கள் முன்னணி சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்றைய தினம் யாழ்.மாவட்டச் செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றனர்.
இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:-
தமிழ் மக்கள் கடந்த பல வருடங்களாக உன்மையான தமிழ்தேசியம், சுயநிர்ணய உரிமை, தாயகம் ஆகிய கோட்பாடுகளுக்காக வாக்களித்திருக்கின்றார்கள். வாக்களித்துக் கொண்டிருக் கின்றார்கள். ஆனால் உன்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களின் கொள்கையை அடி யொற்றி தமிழ் தலமைகள் நடந்திருக்கிறார்களா? என்ற பலமான கேள்வியை நாங்கள் முன்வைக்கிறோம்.
இந்நிலையில் தமிழ் மக்களிடம் உள்ளார்ந்தமாக இருக்கும் கோட்பாடுகளை, கொள்கைகளை முன்கொண்டு செல்வதற்கான மாற்றத்துடன் கூடிய சந்தர்ப்பமாகவே தமிழ்தேசிய மக்கள் முன்னணி இம்முறை நாடாளுமன்ற தேர்தலை நோக்குகின்றது.
திம்பு கோட்பாடு உருவாக்கப்பட்டு, 30 வருடங்கள் நிறைவடைந்திருக்கின்றது. குறித்த திம்பு கோட்பாட்டை அடியொற்றியதாக இன்றுவரையில் நிலைத்திருக்கும் ஒரு கட்சியாக நாங்கள் இருக்கின்றோம். இந்நிலையில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் வெற்றியானது தமிழ் மக்களின் நீண்டகால ஏமாற்றத்திற்கான முற்றுப்புள்ளியாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
போர் நடைபெற்றபோதும், போர் நிறைவடைந்த பின்னரும் தமிழ் மக்கள் அகதிகளாகவும், அல்லல் படுபவர்களாகவும் வறுமையோடு வாழ்பவர்களாகவும், உரிமை மறுக்கப்பட்டவர்களாகவும், நீதி மறுக்கப்பட்டவர்களாகவும் வாழ்கின்ற நிலைக்கு தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் வெற்றி முற்றுப்புள்ளியாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment