July 9, 2015

திருகோணமலையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் முறுகல் நிலை !

நடைபெறவுள்ள பொதுத்தேர்லில் திருகோணமலையிலும் கூட்டமைப்பு பலவீனமடைய தொடங்கியுள்ளது. அக்கட்சியின் ஆசனப்பங்கீடு தொடர்பாக திருகோணமலை கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் அதன் தலைமைக்கும் இடையே முறுகல் நிலை தோன்றியுள்ளது. 

மூதூர் பிரதேசத்தின் தமிழரசுக்கட்சியின் தலைவர் திருச்செல்வம், உறுப்பினர் மதியழகன் உட்பட மேலும் 07 உறுப்பினர்கள் கட்சியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தினை கட்சி தலைமையிடம் ஒப்படைத்துள்ளனர்.

சம்பந்தன் உள்ளிட்ட முதியவர்களின் கூடாரமாக கூட்டமைப்பு மாறியிருப்பதாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். நாளை 10ம் திகதி கூட்டமைப்பு தமது வேட்பு மனுவைத்தாக்கல் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment