July 1, 2015

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு 20க்கும் மேற்பட்ட ஆசனங்கள்!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு 20க்கும் மேற்பட்ட ஆசனங்கள் கிடைக்கும் என்று நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா இதனைத் மட்டக்களப்பில் வைத்து கூறியுள்ளார்.

கூட்டமைப்பின் வாக்குபலம் தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிகரித்துள்ளது.

அத்துடன் எதிர்பார்த்தபடியே தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு எப்போதுமே மக்களோடு மக்களாக இருந்து செயற்பட்டுவந்திருக்கிறது.

இந்த நிலையில் இந்த முறை தேர்தலில் 20க்கும் அதிகமான ஆசனங்களை கூட்டமைப்பு வெல்லும் சாத்தியம் இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment