June 30, 2015

புத்தளம் பிரதேசத்தில் வாகன விபத்தில் இருவர் பலி!

புத்தளம் பிரதேசத்தில் நேற்றைய தினம் இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற லொறி, சிலாபம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதினாலேயே மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் புத்தளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், தப்பிச்சென்ற லொறி சாரதியினை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment