June 12, 2015

நாமல் ராஜபக்சவிடம் நான்கரை மணி நேரம் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்ப்பினர் நாமல் ராஜபக்சவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு காவற்துறையினர் சுமார் நான்கரை மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.
நாமல் ராஜபக்ச இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்துடன் அவரிடம் இன்று காலை 9 மணியில் இருந்து மதியம் 1.45 மணி வரை விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
காவற்துறையினரின் விசாரணைகளுக்கு தான் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்குவதாக நாமல் ராஜபக்ச தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அங்குனுகொலபெலஸ்ஸ நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது, நாமல் ராஜபக்சவின் பாதுகாப்பு அதிகாரி துப்பாக்கியை எடுத்துச் சென்றமை, தென் மாகாண அமைச்சர் டி.வி. உபுல் நிதி மோசடி விசாரணை பிரிவின் அதிகாரிகளை கல்லெறிந்து கொலை செய்ய போவதாக கூறிய சம்பவம் ஆகியன குறித்து நாமல் ராஜபக்சவிடம் விசாரணை நடத்தப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment