June 11, 2015

ஆட்சி மாற்றம் பிரித்தானியாவுக்கு வாய்ப்பு - பிரித்தானியா உயர்ஸ்தானிகர்!

சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டமை, பிரித்தானியாவுக்கு சிறந்த வாய்ப்பாக அமைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவுக்கான பிரித்தானியாவின் உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

மகிந்தவின் ஆட்சி காலத்தில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் முறுகல் நிலை காணப்பட்டது.

இதனால் இரண்டு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக தொடர்புகளும் பாதிக்கப்பட்டிருந்தன.

எனினும் தற்போது இந்த நிலைமை மாற்றம் அடைந்துள்ளது.

பிரித்தானியாவின் குறிப்பிடத்தக்க பல முக்கிய நிறுவனங்களில் சிறிலங்காவில் முதலீடுகளை மேற்கொள்ளவிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment