June 11, 2015

லஞ்சம் வழங்கிய குற்றச்சாட்டை மறுக்கும் அவுஸ்திரேலியா!

ஈழ அகதிகளை திருப்பி அனுப்புவதற்கு அவர்கள் பயணித்த படகின் மாலுமிகளுக்கு லஞ்சம் வழங்கப்படவில்லை என்று அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் பீற்றர் டட்ரன் தெரிவித்துள்ளது.

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் இதனைக் கூறியுள்ளார்.

குறித்த மாலுமிகளே இந்த குற்றச்சாட்டை ஒப்பு கொண்டுள்ளனர்.
அகதிகளை மீள அழைத்துச் செல்வதற்கு தங்களுக்கு தலா 5 ஆயிரம் டொலர்களை அவுஸ்திரேலிய அதிகாரிகள் வழங்கியதாக அவர்கள் ஒப்பு கொண்டதாக, இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து விசாரணை செய்வதற்காக அவுஸ்திரேலியா காவற்துறை குழு ஒன்று அங்கு சென்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த குற்றச்சாட்டை குடிவரவுத்துறை அமைச்சர் மறுத்துள்ளார்.

No comments:

Post a Comment