March 7, 2015

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான செயற்பாடுகளுக்கு பிரித்தானியா கண்டனம்!

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான செயற்பாடுகள் அனைத்தும் பிரித்தானியாவில் குற்றச் செயலாகவே கருதப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகத்தின் பேச்சாளர் ஒருவர் இதனை ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

 அண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடிகளை உயர்த்து லண்டனில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டிருந்தன. அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரின் உருவப்படங்கள் எரிக்கப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டிருந்து.

இந்த வகையான போராட்டங்களை பிரித்தானியா காவற்துறையினர் குற்றச் செயல்கள் என்ற அடிப்படையிலேயே அணுகுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment