March 4, 2015

வன்னியினில் 16வயது பாடசாலை மாணவி கூட்டு வல்லுறவு!

வவுனியா, கனகராயன் குளத்தைச்சேர்ந்த 16வயது பாடசாலை மாணவி உயிரிழந்தமைக்கு கூட்டுவன்புணர்வே காரணமென கண்டறியப்பட்டுள்ளது. அவர் 10
பேரினைக்கொண்ட கும்பலால் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டமையே காரணம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

யுத்த நடவடிக்கையின் போது தனது பெற்றோரை இழந்த குறித்த சிறுமி தனது பேர்த்தியாருடனேயே வாழ்ந்துவந்துள்ளார்.சில தினங்களிற்கு முன்னதாக மகாசிவராத்திரிக்கென கேதீஸ்வரம் சென்றிருந்துள்ளார்.பின்னர் நண்பி வீட்டினிலிருந்த போதே கூட்டுவன்புணர்வுக்குள்ளாகியதாக கூறப்படுகின்றது.

இதனிடையே சிறுமியின் வீட்டுக்கு நேற்றச் சென்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களிடம் சிறுமியின் உறவினர்களும்,ஊரவர்களும் கொலையை மூடி மறைக்க முற்பட்டள்ளதாக தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment