February 4, 2015

தமிழ் இளைஞன் கட்டுநாயக்க வானூர்த்தி நிலையத்தில் வைத்துக் கைது!

மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலை கிராமத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் கொக்கட்டிச்சொலை 6ம் வட்டாரத்தைச் சேர்ந்த தாமோதரம் பாஸ்கரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த கைது குறித்து அவரது உறவினர்களும் உறுதி செய்துள்ளனர்.
டுபாயில் பணி புரிந்து விட்டு இலங்கை வந்த கொக்கட்டிச்சோலை வீட்டில் வசித்து வந்தார். இவது வருகையை அடுத்து சிறீலங்காப் புனாய்வாளர் தொடர்ச்சியான விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
குறித்த இளைஞன் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் என்ற சந்தேகத்தின் பெயரிலேயே கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டார் எனத் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெளிநாட்டில் உள்ள மக்களை நாட்டுக்கு திரும்புமாறு மைத்திரியின் புதிய அரசாங்கம் அறைகூவல் விடுத்திருந்த நிலையில் குறித்த கைது இடம்பெற்றிருப்பதானது சந்தேகத்தையே ஏற்படுத்துவதாக பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment