December 9, 2014

துன்னாலையில் கசிப்புக் காய்ச்சி விற்ற பெண் பொலிசாரால் கைது!

யாழ். துன்னாலை கிழக்கு ஆட்டுப்பட்டி பகுதியிலிலுள்ள வீடொன்றில் வைத்து கசிப்பு உற்பத்தி செய்த 32 வயதுடைய பெண்ணொருவரை
செவ்வாய்க்கிழமை (09) கைது செய்ததாக, நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுமித்.சி.பெரேரா தெரிவித்தார்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அவ்விடத்துக்கு சென்ற பொலிஸார், பெண்ணை கைது செய்ததுடன், அவரிடமிருந்து 1 போத்தல் கசிப்பு, 7 ½ லீற்றர் கோடா, அதற்கு பயன்படுத்திய உபகரணங்கள் என்பனவும் கைப்பற்றினர்.
பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள இந்த பெண்ணுக்கு எதிராக எதிர்வரும் 12ஆம் திகதி பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக பொறுப்பதிகாரி தெரிவித்தார்

No comments:

Post a Comment