November 26, 2014

மாவீரர் சுவரொட்டி வைத்திருந்ததாக இளைஞர் கைது!


தென்மராட்சி மீசாலைப் பகுதியில், மாவீரர்நாள் சுவரொட்டியை வைத்திருந்தார் என்று கூறி சிறிலங்காப் படையினரால், இளைஞர் ஒருவர்
நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடம் இருந்து மாவீரர் நாள் சுவரொட்டிகள் கைப்பற்றப்பட்டதாகவும், இவருடன் தொடர்புடைய மற்றொருவர் தேடப்பட்டு வருவதாகவும், சிறிலங்காப் படையினர் கூறியுள்ளனர்.
வீரசிங்கம் சுலக்சன் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர், மேலதிக விசாரணைகளுக்காக சிறிலங்கா காவல்துறையின் பயங்கரவாத தடுப்புப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment