August 10, 2014

மல்லாவியில் வணிகநிலையத்தில் தீவிபத்து எரிந்து சாம்பல்!

முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மல்லாவியில் அழகுசாதன விற்பனை நிலையத்தில் தீவிபத்தொன்று இடம்
பெற்றுள்ளது. இதன்பொது வணிக நிலையம் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
துணுக்காய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மல்லாவி ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்திருந்த அருட்பிள்ளையார் அழகுசாதன விற்பனை நிலையம் மின் ஓழுக்கு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்து ஏற்பட்டதை அறிந்து அப்பகுதியில் கூடிய பிரதேச வாசிகளும், படையினரும் பிரதேச சபையினரும், காவல்துறையினரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இருப்பினும் கடைத் தொகுதி முற்றாக எரிந்துபோனதால் இதனால் ஒருகோடி ரூபாவரை நட்டமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்து.

No comments:

Post a Comment