August 27, 2016

திருகோணமலையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை நினைவுகூரும் தினம்!

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை நினைவுகூரும் தினத்தை ஒட்டிய திருகோணமலை மாவட்டத்திற்கான நிகழ்வு இன்று காலை 11.30 மணியளவில் திருகோணமலை நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.


திருகோணமலை மாவட்டத்தில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை தேடிக்கண்டறியும் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பங்கேற்றனர்.

குறித்த நிகழ்வில் காணாமல் போன உறவுகள் நினைவு கூரப்பட்டதுடன் அவர்களை கண்டறிவதற்கான முயற்சிகளை எடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.



No comments:

Post a Comment