August 3, 2016

பாதயாத்திரையில் 8 வயது சிறுவனை வைத்து மைத்திரிக்கு எதிராக கோஷம்! - நாமலுக்கு வருகிறது வில்லங்கம் !

கூட்டு எதிர்கட்சியின் பாதயாத்திரையில் 8 வயதுச் சிறுவன் ஒருவன் இணைத்துக் கொள்ளப்பட்டது தொடர்பில் முறைபாடுகள் கிடைத்துள்ளதாகவும், இது தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளதாக சிறுவர்அதிகாரசபையின் ஊடகப் பேச்சாளர் எதிரிவீர குணசேகர தெரிவித்துள்ளார்.
மேலும் இவ்வாறான சம்பவங்களுக்கு சிறுவர்களை ஈடுபடுத்துவதானது சிறுவர்களின்மனதளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் சம்பவம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 
இதேவேளை குறித்த பாதயாத்திரை நிகழ்வில் சிறுவனின் செயற்பாடுகள் தொடர்பில்அனைவரது கவனமும் திரும்பியுள்ளதோடு, பல தரப்பினரினதும் விமர்சனத்துக்கும்குறித்த பிரச்சினை உள்ளாகியிருக்கிறது.

பாதயாத்திரையின் போது, நாமல் ராஜபக்ச தனது தோளில் ஏற்றி வைத்து இந்தச் சிறுவனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக கோஷம் போடச் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment