August 3, 2016

திருக்கேதீஸ்வரம் கிணற்றில் மேலும் பல எலும்புகள், ரவைகள் மீட்பு!

மன்னார்- திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் மனிதப் புதைகுழி அருகேயுள்ள கிணறைத் தோண்டும் பணி நேற்று இரண்டாவது நாளாகவும் காலை முதல் மாலை வரை மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இடம்பெற்ற போது பல்வேறு தடயப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
நேற்று மாலை முன்னெடுக்கப்பட்ட அகழ்வு நடவடிக்கையின் போது பாவிக்கப்படாத துப்பாக்கி ரவை -01 எலும்புத்துண்டுகள் -03, உரப்பை, கம்பித்துண்டுகள் என மேலும் பல தடயப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

 
அகழ்வின் போது கிணற்றில் நீரின் ஊற்று அதிகரித்ததன் காரணமாக தொடர்ச்சியாக அகழ்வுப்பணிகள் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மாலை 5.35 மணியளவில் அகழ்வுப்பணிகள் நிறுத்தப்பட்டது. மீண்டும் இன்று காலை 8.30 மணிக்கு மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் தோண்டப்படவுள்ளது.

No comments:

Post a Comment