July 17, 2016

சமூர்த்தி ஊழல் மோசடி வழக்கு தாக்கல் செய்ய பொலிஸார் மறுப்பு!

ஊழல் மோசடியில் சம்மந்தப்பட்ட பிரபல ஊடகவியலாளரும் சமுர்த்தி உத்தியோகத்தருமான நபரினால் அவரது ஊழல் தொடர்பில் செய்திகளை வெளிக்கொண்டுவந்த இணையத்தளதத்திற்கு
எதிராகவும் சமூக வலைத்தளத்தில் பதியேற்றியவருக்கும் எதிராகவும் செய்யப்பட்ட முறைப்பாட்டை நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட வவுனியா பொலிசார் வழக்கு தாக்கல் செய்ய போதிய முகந்தரம் இல்லாத படியால் வழக்கு தாக்க செய்ய மறுத்துள்ளனர்.
இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
கடந்த சில தினங்களுக்கு முன் புளியங்குளம் கிராம மக்களின் வீட்டுத்திட்டத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர் நிதி மோசடி செய்ததாக சில இணையதளங்களில் செய்திகள் வெளியானதை தொடர்ந்து குறித்த சமூர்த்தி உத்தியோகத்தரால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் முறைப்பாடு செய்யப்பட்டது. இவ் முறைப்பாட்டினை நேற்று விசாரணைக்கு கொண்டுவந்த பொலிஸார் இவ் முறைப்பாட்டிணை வழக்கு தாக்கல் செய்ய போதிய முகந்தரம் இல்லாத படியால் வழக்கு தாக்க செய்ய மறுத்துள்ளனர்.
சம்மந்தப்பட்ட உத்தியோகத்தரால் இணையதளத்திற்கு எதிராகவோ அல்லது ஊடகவியலாளருக்கும் எதிராகவோ எந்தவித முறைப்பாடும் பொலிஸ் நிலையத்தில் தற்போது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment