June 9, 2016

அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என ஐ.நாவிடம் முறைப்பாடு செய்யப்படும் -TNA!

அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் முறைப்பாடு செய்யப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 32ம் அமர்வுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வாரம் அமர்வுகள் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் மற்றும் உறுப்பு நாடுகளுடன் சந்திப்பு நடாத்த எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அரசாங்கம் சில வாக்குறுதிகளை அளித்திருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களின் காணிகளை அரசாங்கம் விடுவி;க்கத் தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment