June 21, 2016

முறிகண்டி அக்கராயன் பகுதியில் ரயிலுடன் டிப்பர் மோதி விபத்து !

முல்லைத்தீவு மாவட்டம், முறிகண்டி – அக்கராயன் வீதியில் இருந்து மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்துடன் இன்று காலை 7.10 மணியளவில் டிப்பர் வாகனம் மோதுண்டு குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முறிகண்டி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சமிக்ஞை விளக்கினை அவதானிக்காமல் புகையிரத கடவையை கடக்க முற்பட்டபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் குறித்த டிப்பர் வண்டியின் சாரதி காயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் என குறிப்பிடப்பட்டுள்ளது. ​

No comments:

Post a Comment