June 21, 2016

நாமக்கல்லில் மீண்டும் ஒரு சாதி ஆணவக் கொலை?

நாமக்கல்லில் சாதி மறுப்புத் திருமணம் செய்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இது ஆணவக் கொலையா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல்லைக் சேர்ந்த சந்தோஷ் என்பவர், வேலூரைச் சேர்ந்த சுமதி என்பவரை 7 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்தார்.
இவர்களின் திருமணத்தை இருவரின் குடும்பத்தினர் ஏற்கவில்லை. கொலையான சுமதியின் வீட்டுக்கு அவரது மாமியார் வந்து சென்றதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளதால், ஆணவக் கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:

Post a Comment