June 22, 2016

சர்வதேச அழுத்தம் அவசியம்- சர்வதேச ஊடகம்!

சர்வதேசம் அழுத்தம் கொடுக்காமல் யுத்தப் பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு நியாயம் கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
த ஆசியன் கொரஸ்பொண்டன்ட் என்ற சர்வதேச ஊடகம் இதனைத் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் அரசாங்கம் பல்வேறு உறுதிமொழிகளை வழங்கியுள்ள போதும், அவை நிறைவேற்றப்பட்டமைக்கான அடையாளங்கள் எவையும் இல்லை.
இந்த நிலையில் அரசாங்கம் பின்னோக்கி நகர்கிறது என்பதும், போதிய அளவில் செயற்படவில்லை என்பது புலனாகி இருக்கிறது.
அரசாங்கத்தின் வீண் பேச்சுகளுக்கு சர்வதேசம் செவிமடுக்கக்கூடாது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி வழங்களுக்கு சர்வதேசம் அழுத்தம் கொடுக்காத பட்சத்தில், இந்த விடயம் நடைமுறைக்கு வர வாய்ப்பே இல்லை என்று அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

No comments:

Post a Comment