June 22, 2016

கிளிநொச்சி செயலகம் முன்தாக தனித்து காணிக்கு நீதி கோரி குடும்பமே போராட்டம்!

தமது குடியிருப்பு காணிகளினிலிருந்து தம்மை விரட்ட முற்படுவதாக தெரிவித்து கரைச்சி பிரதேச செயலரிற்கு எதிராக குடும்பமொன்று கிளிநொச்சி
மாவட்ட செயலகம் முன்தாக தனித்து போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளது. இருசிறு குழந்தைகள் மற்றும் முதிய தாயார் ஒருவர் சகிதம் சுலோக அட்டைகளை தாங்கியவாறு அவர்கள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
தமது குடியிருப்பு காணிகளினை கையக்கப்படுத்தும் வகையில் பிரதேச செயலர் நடவடிக்கைகளை எடுத்துவருவதாக குற்றஞ்சாட்டியுள்ள அவர்கள் பிரதேச செயலாளரால் அனுப்பப்பட்ட கடிதங்களையும் பார்வைக்கு பதாகைகளில் தொங்கவிட்டுள்ளனர்.
ஏற்கனவே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதற்காக சுமார் பத்து ஏக்கர் காணியை அவரிற்கு தாரை வார்க்க சம்மதிக்கின்ற அரச அதிகாரிகள் சாதாரண மக்களது காணிகளை சட்டத்தை காரணங்காட்டி சுவீகரிப்பதில் போட்டிபோடுவது தெரிந்ததே.

No comments:

Post a Comment