June 1, 2016

அதிக கொத்தடிமைகள் வாழும் நாடுகளில் இந்தியா முதலிடம்! 42வது இடத்தில் இலங்கை!

உலக நாடுகளில் அதிக கொத்தடிமைகளை கொண்ட நாடுகளில் இலங்கை 42ஆவது இடத்தினை பிடித்துள்ளது.


இதன்படி இலங்கையில் சுமார் 45 ஆயிரத்து 900 கொத்தடிமைகள் வாழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த பட்டியலில் அதிக கொத்தடிமைகள் கொண்ட நாடாக இந்தியா பெயரிடப்பட்டுள்ள அதேவேளை, சுமார் 18 மில்லியன் கொத்தடிமைகள் இந்தியாவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கை இந்திய சனத்தொகையில் 1.4 வீதம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வோல்க் பிரி அறக்கட்டளை வெளியிட்டுள்ள 2016 உலக அடிமைத்தன அட்டவணையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 ஆண்டுகளுக்கு முன்னர் 167 நாடுகளில் 42 ஆயிரம் பேரிடம் 50 மொழிகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தற்போது திருத்தம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த ஆய்வுகளுக்கு அமைய அடிமைகள் 28 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை, உலகம் முழுவதும் 4.5 கோடிக்கு அதிகமானவர்கள் நவீன அடிமைகளாக சிக்கியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அடிமைகளாக சிக்குன்டவர்களில் மூன்றில் 2 பங்கு ஆசிய மற்றும் பசிபிக் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இவ்வரிக்கையின் பிரகாரம் உலக நாடுகள் முழுவதும் 45.8 மில்லியன் பேர் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டு வருகின்றனர்.

அத்துடன், ஆசியாவை பொறுத்தமட்டில் இந்தியாவிற்கு அடுத்தபடியாக சீனாவில் 30.3 இலட்சம் கொத்தடிமைகளும், பாகிஸ்தான் 21.3 இலட்சம் கொத்தடிமைகளும், பங்களாதேஷ் 15.3 இலட்சம் கொத்தடிமைகளும், உஷ்பெகிஸ்தான் 12.3 லட்சம் கொத்தடிமைகளும் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், மக்கள் தொகை அடிப்படையில் உஸ்பெகிஸ்தானில் 3.97 சதவீதமும் கம்போடியாவில் 1.65 சதவீதமாகும்.

இதேவேளை, இந்த ஆய்வில் இருந்து வட கொரியாவில் மட்டுமே இந்த நவீன அடிமை எந்த வடிவிலும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment