June 1, 2016

இலங்கையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கனேடிய அரசு 35 மில்லியன் நிதியுதவி!

இலங்கையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கனேடிய அரசாங்கம் 35 மில்லியன்
இலங்கை ரூபாய்களை வழங்கியுள்ளதாக, இலங்கையில் உள்ள கனேடிய உயர்ஸ்தானிகரம் தெரிவித்துள்ளது.

இந்த நிதியானது, கனேடிய மனிதாபிமான உதவு நிதியமான சீ.எச்.ஏ.எஃப், அவசர அனர்த்த உதவிநிதியம் மற்றும் குளோபல் எப்ஃபெயர்ஸ் கனடா ஆகிய நிறுவனங்களின் ஊடாக இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த பெருந்தொகையான நிதியுதவியின் மூலம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சுமார் 62 ஆயிரம் பேர் பயன்பெறுவர் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த மாத ஆரம்பத்தில் இலங்கையின் அனைத்து பாகங்களிலும் கொட்த்தீர்த்த கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில், நூற்றுக்கும் அதிகமானோர் பலியாகியதோடு, நான்கு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment