May 20, 2016

மீண்டு(ம்) வந்து வெற்றிக் கொடி நாட்டிய விஜயதாரணி!

காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே கடும் எதிரிகளை வைத்துள்ளவர் விஜயதாரணி.
ஆனால் அதையும் மீறி, தேர்தல் போட்டிகளையும் மீறி, சவால்களைச் சந்தித்து 2வது முறையாக எம்.எல்.வாகியுள்ளார் விஜயதாரணி. விளவங்கோடு தொகுதியையும் தக்க வைத்துள்ளார்.

கன்னி்யாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவரான விஜயதாரணியின் தாத்தா மறைந்த கவிமணி தேசிகவிநாயகம் ஆவார் (இவரது பெயருக்குப் பின்னால் ஜாதியைச் சேர்ப்பது அவர் சுவாசித்த தமிழுக்கு இழுக்கு என்பதால் ஜாதிப் பெயரைச் சேர்க்கவில்லை).

ஆனால் கட்சியில் சுயம்புவாக வளர்ந்தவர் விஜயதாரணி. கடந்த 2011 தேர்தல்தான் முதல் முறையாக விஜயதாரணி போட்டியிட்ட சட்டசபைத் தேர்தலாகும். முதல் தேர்தலியே அட்டகாசமாக வென்றவர் விஜயதாரணி. அதை காங்கிரஸாரே கூட எதிர்பார்க்கவில்லை.

No comments:

Post a Comment