September 25, 2015

விழ விழ.. எழுந்து கொண்டே இருப்போம்..!மு.வே.யோ.!

இப்படித்தான் வரும் என்று
எப்போதோ எங்களுக்குத் தெரியும்..
கோவேறு கழுதையும்..
பெருச் சாளியும் சேர்ந்தால்..


கூட்டையா கட்டும்?
சேற்றைத்தான்
அள்ளி இறைக்கும்..
அமெரிக்கா குத்திய
முத்திரையில்..
இந்தியா
திருத்தம் செய்தது..
அதுதான் உண்மை..
கூட்டிக் கொடுப்பவன்..
கூலி வாங்காமலா செய்வான்?
நாளை..
இருந்து பார்ப்போம்….
இருந்தும்..இரு நாடுகளுமே ..
தமிழர்களின் முதுகில்..
கோடரியால்
குத்தி விட்டன
என்பதுதான் உண்மை..
..இனி
ஒவ்வொருநாளும்..
கச்சதீவுக்கு அருகே..
தொடர்ந்து
தமிழக மீனவர்களின்
கண்ணீர்தான் கலக்கும்!
அடிக்கடி விழுந்து..
விழுந்து
எழும்பியவர்கள் நாங்கள்..
வலிக்காது..
விழ விழ எழுந்து கொண்டே
இருப்போம்..!

No comments:

Post a Comment