September 25, 2015

இறுதிப்போரில் இரசாயன ஆயுதங்களை இராணுவம் பயன்படுத்தியதை எக்னெலிகொட அறிந்திருந்தார்! – மனைவி சாட்சியம்!

விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட போரின்போது இராணுவத்தினர் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக ஊடகவியலாளர் பிரகீத்தின் மனைவி சந்தியா எக்னெலிகொட ஜெனிவாவில் சாட்சியமளித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜெனீவா சென்றுள்ள சந்தியா, இதுகுறித்த சாட்சியமொன்றை அளித்துள்ளார்.
இறுதிக்கட்டப் போரின்போது இராணுவத்தினர் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியமை குறித்து கடத்திக் காணாமல் செய்யப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட அறிந்திருந்ததாக அவர் தனது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுடான போரில் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியமை தொடர்பில் இராணுவம் தொடர்ந்தும் மறுத்துவரும் நிலையில் சந்தியா எக்னெலிகொடவின் சாட்சியம் முக்கியமானதாக அமைந்துள்ளது.

No comments:

Post a Comment